ஓ -கைகாட்டி |
எல்லாம் முடிந்து |
ஏதுமற்ற உலகத்தில் |
என்னுடய அரசாட்சி |
நடத்தல் வேண்டும். |
உலகத்தின் புதிய விடியலை |
நானே தீர்மானிக்க வேண்டும். |
காற்றோ, நீரோ, மழையோ |
எதுவாயினும் |
என்னுடைய ஆணைக்குப் |
பணிதல் வேண்டும், |
என்னிலும் புத்திசாலி |
எவனுமில்லையென |
இறுமாந்திருந்தபோது |
கெக்கலித்து, |
சிறகடித்துப் போனதொரு காகம், |
தன் எச்சத்தை |
என் தலையில் இட்டபடி. |