மழை-8, துளி-13 : கூடு

கூடு – புலியூர் முருகேசன்

குறைப் பிள்ளையாய்
தூக்கணாங்குருவி கட்டிய கூடு
இங்குமங்கும் அலையும்
 
வந்த குருவியின் அலகில்
நாலைந்து காய்ந்த வைக்கோற் பிரியோ,புல்லோ
 
நெல் கொத்தினாலும்
நீர் குடித்தாலும்
உயரப் பறந்தாலும்
குருவிக்கு
பொழுதுக்கும் குறையாய்க் கிடக்கும்
கூட்டின் மேல் ஞாபகங்கள்.
 
எனவே… எங்கு எதன் மீது
எந்த திசைமீது நின்றாலும், பறந்தாலும்
கண்ணுக்குத் தெரிபவை
காய்ந்த புற்களே!

 

Leave a comment