கூடு – புலியூர் முருகேசன்
குறைப் பிள்ளையாய் |
தூக்கணாங்குருவி கட்டிய கூடு |
இங்குமங்கும் அலையும் |
வந்த குருவியின் அலகில் |
நாலைந்து காய்ந்த வைக்கோற் பிரியோ,புல்லோ |
நெல் கொத்தினாலும் |
நீர் குடித்தாலும் |
உயரப் பறந்தாலும் |
குருவிக்கு |
பொழுதுக்கும் குறையாய்க் கிடக்கும் |
கூட்டின் மேல் ஞாபகங்கள். |
எனவே… எங்கு எதன் மீது |
எந்த திசைமீது நின்றாலும், பறந்தாலும் |
கண்ணுக்குத் தெரிபவை |
காய்ந்த புற்களே! |