மழை-8, துளி-17 : ஓ

-கைகாட்டி
எல்லாம் முடிந்து
ஏதுமற்ற உலகத்தில்
என்னுடய அரசாட்சி
நடத்தல் வேண்டும்.
உலகத்தின் புதிய விடியலை
நானே தீர்மானிக்க வேண்டும்.
காற்றோ, நீரோ, மழையோ
எதுவாயினும்
என்னுடைய ஆணைக்குப்
பணிதல் வேண்டும்,
என்னிலும் புத்திசாலி
எவனுமில்லையென
இறுமாந்திருந்தபோது
கெக்கலித்து,
சிறகடித்துப் போனதொரு காகம்,
தன் எச்சத்தை
என் தலையில் இட்டபடி.

 

Leave a comment